×

திருச்செந்தூர் முருகன் கோயில் வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி: தேனி மாவட்ட பக்தர் வழங்கினார்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் வெங்கடாஜலபதிக்கு ரூ.12.50 லட்சம் மதிப்பில் 13,800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை தேனி மாவட்டத்தை சேர்ந்த பக்தர் வழங்கினார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் செந்தூர்ராஜ் இன்ஜினியரிங் நிறுவனத்தை சேர்ந்தவர் கிருபாகரன். இவர், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 2வது பிரகாரத்தில் உள்ள வெங்கடாஜலபதிக்கு வெள்ளி அங்கி வழங்குவதாக வேண்டியிருந்தார்.

அதன்படி ரூ.12.50 லட்சம் மதிப்பிலான 13,800 கிராம் எடையுள்ள வெள்ளி அங்கியை கிருபாகரன் தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்து உள்துறை அலுவலகத்தில் கோயில் இணை ஆணையர் (பொறுப்பு) கல்யாணியிடம் வழங்கினார். இதில் உள்துறை சூப்பிரண்ட் ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர் உடனிருந்தனர். கிருபாகரன் குடும்பத்தினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.



Tags : Thiruchendur Murugan Temple ,Theni district ,devotee , Thiruchendur Murugan Temple Venkatajalapathy Silver Gown: Presented by a devotee of Theni district
× RELATED பள்ளிகள் விடுமுறையையொட்டி...