×

கண்களின்றி பிறந்த கன்று

ஆம்பூர்: ஆம்பூர் அடுத்த சின்னபள்ளிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம் (52). இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வருகிறார். இந்நிலையில், இந்த பசுமாடு நேற்று முன்தினம் கன்று ஒன்றை ஈன்றது. ஆனால், கண்ணிமைக்காமல் இருந்தது.

கண் உள்ள பகுதியை திறந்து பார்த்தபோது கண் இன்றி அந்த கன்று இருப்பதை கண்டு செல்வம் அதிர்ச்சி அடைந்தார். இதனால் கன்று தட்டுத்தடுமாறி நடந்து செல்வதாகவும், நடமாட இயலாமல் தடுமாறி விழுகிறது. இருப்பினும், அந்த கன்றை உரிய பாசத்துடன் பராமரிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : Calf born without eyes
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை