சென்னை: தமிழகத்தில் வரும் 19-ம் தேதி முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.