×

விஷம் குடித்த வாலிபர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த மோரை திருமலை நகரை சேர்ந்தவர் கண்ணன்(34).  இவரது மனைவி சுந்தரி(29). அரசம்பாக்கத்தில் உள்ள செங்கல்சூளையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் சுந்தரிக்கும் செங்கல்சூளையில் வேலை பார்க்கும் மோரை கன்னியம்மன் நகரை சேர்ந்த ஆனந்த்(32) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டு இருவரும் தலைமறைவாகினர். போலீசார் தேடுவதை அறிந்த இருவரும் ஆவடி டேங்க்  பேக்டரி காவல் நிலையத்தில் விஷம் குடித்த நிலையில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரையும் மீட்டு ஆவடி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி கள்ளக்காதலன் ஆனந்தன் இறந்தார். சுந்தரி சிகிச்சை  பெற்று வருகிறார்.



Tags : teenager , Kannan (34) is from Avadi next to Morai Thirumalai.
× RELATED பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி: டிரைவருக்கு 2 ஆண்டு சிறை