×

எம்.ஜி.ஆர் பிறந்தநாளை முன்னிட்டு 18ம் தேதி முதல் தெருமுனை பிரசார கூட்டம் நடத்த வேண்டும்: டிடிவி.தினகரன் உத்தரவு

சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆரின் 104வது பிறந்தநாள் வரும் 17ம் தேதி முதல் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு சென்னை, அண்ணா சாலையில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் உருவச்சிலைக்கு கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவிருக்கிறார். இந்நிகழ்விற்கு கட்சி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், அனைத்து சார்பு அணிகளின் செயலாளர்கள் அனைவரும் போதிய சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து கலந்து கொள்ள வேண்டும். இதனைத்தொடர்ந்து 18ம் தேதி முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும் எம்.ஜி.ஆர் பிறந்தநாளையொட்டி தெருமுனை பிரசார கூட்டங்களையும், ஏழை-எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளையும் கட்சியினர் சிறப்புற நடத்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : street campaign meeting ,eve ,DTV.Dhinakaran ,MGR ,birthday , The first street campaign meeting should be held on the 18th to mark MGR's birthday: DTV.Dhinakaran orders
× RELATED பாராளுமன்ற தேர்தலையொட்டி ஓசூர் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதல்