×

தமிழீழம் எட்டும் வரை மாணவர்கள் ஒற்றுமை நீடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் ஈழத்தமிழர் இனப்படுகொலையை நினைவுகூரும் நினைவு தூணை மீண்டும் அதே இடத்தில் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முள்ளிவாய்க்கால் நினைவு தூணை இடித்த சிங்கள இனவெறி அரசின் செயலை கண்டித்து 9 தமிழ் மாணவர்கள், காலவரையற்ற உண்ணாநிலை மேற்கொண்டதன் பயனாகத்தான் இது சாத்தியமாகியிருக்கிறது. தங்கள் உடலை வருத்தி இதை சாதித்த மாணவர்களுக்கு பாராட்டுகள். தமிழர்கள் ஒன்றுபட்டால், குறிப்பாக மாணவர்கள் ஒன்றுபட்டால் இலக்குகளை எட்ட முடியும் என்பதற்கு இது உதாரணம். ஈழத்தமிழர்களின், மாணவர்களின் இந்த ஒற்றுமையும், போர்க்குணமும் தமிழீழம் என்ற இறுதி இலக்கை எட்டும் வரை நீடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Ramadas ,Tamil Eelam , Ramadas urges students to continue unity till Tamil Eelam is reached
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்