சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தற்போது வரை சென்னையில் இருந்து அரசு பேருந்துகளில் 63,508 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இன்று காலை முதல் இயக்கப்பட்ட பொங்கல் சிறப்பு பேருந்துகளில் தற்போது வரை 1,458 பேருந்துகளில் (எப்போதும் இயக்கப்படும் பேருந்து1,375 மற்றும் 83 சிறப்பு பேருந்துகளில் ) 63,508 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை சொந்த ஊர்களுக்கு செல்ல 92,000 பேர் முன்பதிவுசெய்துள்ளனர்.