×

சட்டசபை தேர்தலில் மக்கள் அதிமுகவிற்கே அதிகம் வாக்களிப்பார்கள் : அமைச்சர் ஓ.எஸ்.மணியன் நம்பிக்கை

நாகை, நாகையில் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டி: மூன்றாவது முறையாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சி அமைக்கும். அதிமுகவுடன் பாஜ கூட்டணி வைத்துள்ளதால் அதிமுகவிற்கு பின்னடைவு இருக்காது. நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அதிக இடங்களை பிடிக்கவில்லை என்றாலும், தமிழகத்தில் நடந்த நாங்குநேரி உள்ளிட்ட சட்டசபை இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் வேறு, சட்டசபை தேர்தல் வேறு என பிரித்து அதற்கு ஏற்ப தமிழக மக்கள் வாக்களித்துள்ளனர். நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தாலும், சட்டசபை தேர்தல் என்று வரும்பொழுது மக்கள் அதிமுகவிற்கே அதிகம் வாக்களிப்பார்கள் என்றார். சசிகலா விடுதலை குறித்து கேள்வி கேட்டதற்கு, ‘‘வரட்டும் பார்க்கலாம்’’ என்றார் அமைச்சர் ஓ.எஸ்.மணியன்.

Tags : OS Maniyan ,elections ,Assembly ,AIADMK , OS Maniyan
× RELATED 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஒரே அணியில் போட்டியிடும்: வி.கே.சசிகலா