சென்னை: கையில் உள்ள பொம்மை பேசுவது போல பேசும் மாயக்குரல் நிபுணர் வெங்கி மங்கி (70) சென்னையில் காலமாகியுள்ளார். மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் வெங்கி மங்கி உயிர் பிரிந்தது. மாயக்குரல் கலையை தமிழகத்தில் முதல்முதலில் அறிமுகப்படுத்திய வெங்கி மங்கி, 27 நாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.