மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நிபந்தனைகளுடன் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதி அளித்துள்ளது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு குழுவினர் முறைகேடுகள் செய்திருப்பதாக ஐகோர்ட் மதுரை கிளையில் அன்பரசன் என்பவர் மனுதாக்கல் செய்து இருந்தார். மேலும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்க் தாழ்த்தப்பட்டோருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்றும் மனுவில் புகார் தெரிவிக்கப்பட்டு இருந்துள்ளது.