×

மகாராஷ்டிரா தீ விபத்தில் உயிரிழந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி ஒப்புதல்!!

டெல்லி : மகாராஷ்டிரா மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்க பிரதமர் மோடி ஒப்புதல் வழங்கியுள்ளார். முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தின் பாந்த்ரா மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு பொது மருத்துவமனையின் பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சைப் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 குழந்தைகள் பரிதாபமாக இறந்தன. 7 குழந்தைகள் மீட்கப்பட்டன.

பச்சிளம் குழந்தைகளைப் பலி கொண்ட இந்த தீபத்தின் காரணம் இன்னும் அறியப்படவில்லை.  விபத்தில் மரணம் அடைந்த பச்சிளம் குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிதி உதவியை மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.தீ விபத்து நடந்த பாந்த்ரா மருத்துவமனையை முதல்வர் உத்தவ் தாக்கரே நேரில் சென்று பார்வையிட்டார். இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு அவர் ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா பாந்திராவில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 இலட்சம் வழங்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கவும் அவர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Tags : Modi ,families ,fire ,Maharashtra ,infants , Maharashtra, Prime Minister Modi, approved
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...