சென்னை: நீட் மதிப்பெண் சான்றிதழ் மோசடி வழக்கில் கைதான பல் மருத்துவர் பாலச்சந்திரனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மாணவி மோசடியில் ஈடுபட்டது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து பெரியமேடு போலீசார் பாலச்சந்திரனை பரமக்குடி கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர்.