நெல்லை: நெல்லையில் தொடர் மழை காரணமாக அணைகள் திறக்கப்பட்டதால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ, செல்பி எடுக்கவோ கூடாது என மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.