×

இருளில் மூழ்கியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: தலைநகர் இஸ்லாமாபாத் உட்பட பாகிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் நேற்று முன்தினம் இரவு இருளில் மூழ்கின.  சிந்து மாகாணத்திலுள்ள குடு மின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு காரணமாக இரவு 11.41க்கு மின் தடை ஏற்பட்டது. கராச்சி, ராவல்பிண்டி, லாகூர், இஸ்லாமாபாத், முல்தான் உள்ளிட்ட நகரங்கள் முழுமையாக இருளில் மூழ்கின. இன்று அதிகாலை முதல் படிப்படியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. முழுமையான மின்சாரம் வழங்குவதற்கு சிறிது அவகாசம் தேவை என்றும், தொழில்நுட்பக் குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருவதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.


Tags : Pakistan , Pakistan plunged into darkness
× RELATED பயங்கரவாதம் சப்ளை செய்த பாகிஸ்தான்...