×

சவுகார்பேட்டை துப்பாக்கிச் சூடு சம்பவம்: மேலும் ஒருவர் கைது

தண்டையார்பேட்டை: சவுகார்பேட்டையில் பைனான்ஸ் நிறுவன அதிபர் தலில் சந்த் அவரது மனைவி புஷ்பா பாய் மகன் சீத்தல்குமார் ஆகியோர் கடந்த நவம்பர் 11ம் தேதி துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக சீத்தலின் மனைவி ஜெயமாலா, மைத்துனர்கள் கைலாஷ், விகாஷ் மற்றும் நண்பர்கள் விஜய் உத்தம், ரபீந்தரநாத்கர், ராஜூ ஷின்டே, ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜிவ்துபே என 7 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராஜிவ் துபே தவிர்த்து மற்ற அனைவர் மீதும் நேற்று முன்தினம் குண்டர் சட்டம் போடப்பட்டது.

இந்நிலையில் கைலாஷூக்கு நாட்டு துப்பாக்கி வாங்கி கொடுத்த ராஜஸ்தானை சேர்ந்த சந்திர தீப் சர்மா(25) என்பவரை பிடிக்க கடந்த வாரம் இன்ஸ்பெக்டர் தியாகராஜ்  தலைமையிலான தனிப்படை போலீசார் ராஜஸ்தான் சென்று முகாமிட்டு நேற்று முன்தினம் அவரை கைது செய்து சென்னை அழைத்து வந்தனர். பின்னர் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 


Tags : Saugatuck ,shooting ,arrest , Saugatuck shooting: One more arrest
× RELATED வங்கதேசத்துக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றதாக சேலையூர் எஸ்.ஐ. கைது!!