×

கோயில் கால்வாயில் வாலிபர் சடலம் மீட்பு

புழல், ஜன.11: செங்குன்றம் அடுத்த விளாங்காடு பாக்கம் ஈஸ்வரன் கோயில் குளத்திற்கு செல்லும் கால்வாயில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று இருப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் அங்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக, வழக்குப்பதிந்த போலீசார், இறந்த நபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? யாரேனும் அவரை கொலை செய்து, சடலத்தை வீசி சென்றனரா? எனப் பல்வேறு கோணங்களில்  விசாரித்து வருகின்றனர்


Tags : Recovery ,temple canal , Recovery of the body of a youth in the temple canal
× RELATED உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய...