×

நாகூர் தர்காவில் கந்தூரி விழா 5 மினராக்களில் பாய்மரம் ஏற்றம்

நாகை: கந்தூரி விழாவை முன்னிட்டு நாகை மாவட்டம் நாகூர் தர்காவில் உள்ள 5 மினராக்களிலும் பாய்மரம் ஏற்றும் நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடந்தது. தர்கா பரம்பரை கலிபா முகமது மஸ்தான் சாகிப் துவா ஓதி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்பின் சாகிப் மினராவில் பாய்மரம் ஏற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து தஞ்சையை ஆட்சி செய்த மாமன்னர் ராஜராஜசோழன் கட்டி கொடுத்த பெரியமினரா, தலைமாட்டு மினரா, ஒட்டுமினரா, முதுபக்மினரா என 5 மினராக்களில் பாய் மரம் ஏற்றப்பட்டது. இதில் ஏராளமானோர் கொட்டும் மழையில் கலந்து கொண்டனர்.

Tags : Kandur Festival ,Nagore Dargah Sailing , Kanthuri Festival at Nagore Dargah Sailing on 5 minarets
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் புகழ்...