×

மாநகர செய்தி துளிகள்...

கடைகளில் கொள்ளை: தாம்பரம் அடுத்த முல்லை நகர் பிரதான சாலை சந்திப்பில் உள்ள சூப்பர் மார்க்கெட் மேற்கூரையில் துளையிட்டு கல்லாவில் இருந்த ரூ25 ஆயிரம், மற்றும் வீட்டு உபயோக பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

* அமைந்தகரையில் உள்ள பிரபல ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து, கல்லாவில் இருந்த ரூ2.10 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். கட்சி பிரமுகர் தற்கொலை: கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் செல்வராஜ், அதே பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி வந்தவரிடம் ₹15 லட்சம் முதலீடு செய்திருந்தார். மேலும் பலரை அந்த நிறுவனத்தில் முதலீடு செய்ய வைத்தார். கடந்த மாதம் ஏலச்சீட்டு நடத்தியவர் மாயமானதால், இவரை நம்பி முதலீடு செய்தவர்கள்  நெருக்கடி கொடுத்தனர். இதனால் மனமுடைந்த செல்வராஜ் தீக்குளித்துள்ளார். அவரை மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் இறந்தார்.

டிரைவருக்கு கத்திக்குத்து: மாதவரம் பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சதாப்பை (28), செங்குன்றத்தை சேர்ந்த சக்திவேல், விக்டர், முத்து ஆகியோர் நேற்று முன்தினம் இரவு சவாரி அழைப்பது போல் நடித்து, கத்தி முனையில் பணம் கேட்டனர். அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த 3 பேரும், சதாப்பை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

6 பேருக்கு குண்டாஸ்: மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த கைலாஷ் ஜலிந்தர் பாக்ரே (32), விலாஸ் ஜலிந்தர் பாக்ரே (33), ஜெயமாலா ஷீத்தல் குமார் (29), மகாராஷ்டிரா மாநிலம், அகமது நகரை சேர்ந்த விஜய் உத்தம் காம்ளே (28), ராஜூ உத்தம் ஷிண்டே (31), கொல்கத்தா, பாபுண்டா, கெராம் பகுதியை சேர்ந்த ரபிந்தர நாத்கர் (25) ஆகிய 6 பேர் மீது 3 பேரை துப்பாக்கியால் சுட்டுக்ெகான்ற வழக்கு யானைகவுனி காவல் நிலையத்தில் உள்ளது. தொடர் குற்றச் செயலில் ஈடுபட்ட இவர்களை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

முதியவர் மர்ம மரணம்: பெரம்பூர் ரயில் நிலைய 4வது நடைமேடையில் நேற்று முன்தினம் இரவு 60 வயது மதிக்கத்தக்க முதியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ரயில்வே போலீசார், சடலத்தை கைப்பற்றி இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த  தர் (46), காசிமேடு பகுதியில் தங்கி, மீன்பிடி துறைமுகத்தில் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை இவர் படகில் இருந்து மீன்களை இறக்கியபோது திடீரென மயங்கி விழுந்து இறந்தார்.

இளம்பெண் தற்கொலை: வேளச்சேரி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த ரவிச்சந்திரன் (50), குடும்ப தகராறில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags : Municipal news drops ...
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...