×

நாகர்கோவில், கோவைக்கு 2 ரயில்கள் இயக்கம்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து நாகர்கோவில், கோவைக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  எழும்பூர்- நாகர்கோவில் (06091) இடையே அதிவேக சிறப்பு ரயில் வரும் 12,13ம் தேதிகளில் இரவு 10.30 மணிக்கு புறப்படும். அதைப்போன்று நாகர்கோவில்- சென்னை எழும்பூர் (06092) இடையே அதிவேக சிறப்பு ரயில் 16, 17ம் தேதிகளில் பிற்பகல் 2.45 மணிக்குபுறப்படும். மேலும் சென்னை சென்ட்ரல்- கோவை இடையே (06089) அதிவேக சிறப்பு ரயில் 13ம் தேதி இரவு 11.30 மணிக்கு புறப்படும்.

அதைப்போன்று கோவை- சென்னை சென்ட்ரல் இடையே (06090) அதிவேக சிறப்பு ரயில் 17ம் தேதி இரவு 8 மணிக்கு புறப்படும். இந்த சிறப்பு ரயில் கூடுதலாக பெரம்பூர் ரயில்நிலையத்தில் நின்று புறப்படும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்படும்.


Tags : Nagercoil ,Coimbatore , 2 trains to Nagercoil and Coimbatore
× RELATED நள்ளிரவு வரை வந்திறங்கிய வாக்கு பெட்டிகள்