×

ஜன.14ம் தேதி முதல் சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி!: சிறைத்துறை நிர்வாகம்

சென்னை: தமிழகத்தில் சிறையில் உள்ள கைதிகளை நேரில் சந்திக்க உறவினர்களுக்கு அனுமதி அளித்து சிறைத்துறை டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஜனவரி 14ம் தேதி முதல் சிறைக் கைதிகளை நேரில் சந்திக்க உறவினர்களுக்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி வழங்கியது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 9 மாதங்களாக காணொலி காட்சி மூலம் மட்டுமே கைதிகளிடம் உறவினர்கள் பேசி வந்தனர். கைதிகளின் உறவினர்கள் கோரிக்கையை ஏற்று சிறைத்துறை நிர்வாகம் கைதிகளை நேரில் சந்திக்க அனுமதி வழங்கியுள்ளது. சிறைவாசிகளை சந்திக்க விரும்பும் பார்வையாளர்கள் 24 மணி நேரத்திற்கு முன் முன்பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Tags : Relatives ,inmates , Jan.14, prisoner, relative, permission
× RELATED சிறையில் இட்லி சாப்பிட்ட 13 கைதிகளுக்கு வயிற்று வலி