×

முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி.: 9 மாதங்களுக்கு பிறகு இன்று திறப்பு

நீலகிரி: 9 மாதங்களுக்கு பிறகு முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த முதுமலை புலிகள் காப்பகம் கொரோனா வைரஸ் மற்றும் ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 17-ம் தேதி மூடப்பட்டது. கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டு, செப்டம்பர் முதல் நீலகிரிக்கு சுற்றுலா பயணிகள் வர அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் 9 மாதங்களுக்கு பிறகு கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி சுற்றுலா பயணிகள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் யானை சவாரி மற்றும் வாகனங்களில் சவாரி செய்வது மகிழ்ச்சி அளிப்பதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 11-ம் தேதி முதல் முதுமலையில் சுற்றுலா விடுதிகளும் திறக்கப்படுவதை தகவல் தெரிவித்துள்ளனர். வாகனம், யானை சவாரி, வளர்ப்பு யானைகள் முகாம், சுற்றுலா விடுதிகளில் 50% சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Tags : Mudumalai Tiger Reserve , Tourists allowed in Mudumalai Tiger Reserve: Opening today after 9 months
× RELATED நீலகிரி அருகே யானை தாக்கி விவசாயி பலி