கொழும்பு: முள்ளிவாய்க்கால் நினைவுத்தூணை பல்கலைக்கழக நிர்வாகவும், அரசும் இணைந்து அகற்றியது என துணைவேந்தர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் சற்குணராஜா தகவல் தெரிவித்தார். அரசு நிலத்தில் நினைவுத்தூண் கட்டியதை எப்படி அனுமதிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து நினைவுத்தூண் அகற்றப்பட்டதில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை, சட்டரீதியாகவும் சந்திக்க தயார் என துணைவேந்தர் குறிப்பிட்டுள்ளார்.