சென்னை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் நினைவுச்சின்னம் இடிக்கப்பட்டுள்ளது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகர்களின் உணர்வுகளோடு விளையாடும் இத்தகைய நடவடிக்கைகள் சரியானதல்ல. எண்ணங்களில் நிறைந்திருக்கும் போராட்ட நினைவுகளை சின்னங்களை அழிப்பதன் மூலம் அகற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.