சென்னை: நான் அதிமுக-வின் விசுவாசமிக்க தொண்டன்; எனது வார்த்தைகள் அனைத்தும் இதயத்தின் ஆழ்மனதில் இருந்து வருபவை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை வானகரத்தில் நடைபெறும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆட்சி நிலைக்காது என கூறியவர்கள் மத்தியில் சிறப்பாக ஆட்சி நடைபெறுகிறது. சட்டமரண தேர்தலில் ஒற்றுமையுடன் பணியாற்றினால் தான் அதிமுக வெற்றி பெற முடியும். 4 ஆண்டுகளில் சிறப்பான ஆட்சியை கொடுத்ததாக நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.