சென்னை: தருமபுரம் ஆதீன நிலத்தில் வணிக நோக்கில் கட்டடம் கட்ட தடை கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டப்படி மடம் என்பது அரசு அமைப்பு என்பதை மனுதாரர் நிரூபிக்கவில்லை என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. திருக்கடையூரில் சிதிலமடைந்த 14,000 ச.அ. திருமண மண்டபத்தை இடித்து 3 மாடி கட்டடம் கட்ட எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.