சென்னை: யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஈழ தமிழர்களின் பாரம்பரிய நினைவு சின்னங்கள் சிதைக்கப்பட்டதன் தொடர்ச்சியாக நினைவுத் தூணும் இடிக்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பது உலகத் தமிழர்களின் எதிர்பார்ப்பு எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.