×

சுக்காலியூர் அண்ணாநகர் பகுதியில் பயன்பாடின்றி சுகாதார வளாகம்

கரூர்: கரூர் சுக்காலியூர் அண்ணா நகர்ப்பகுதியில் பயனற்ற நிலையில் உள்ள சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.கரூர் நகராட்சிக்குட்பட்ட சுக்காலியூர் அண்ணா நகர்ப் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியினர் நலன் கருதி சில ஆண்டுகளுக்கு முன்பு சுகாதார வளாகம் கட்டித் தரப்பட்டது.

தற்போது, பல்வேறு காரணங்களால் இவை பயன்பாடின்றி உள்ளது. மேலும், இந்த வளாகத்தை சுற்றிலும் அதிகளவு முட்புதர்கள் வளர்ந்துள்ளன.எனவே, இதனை திரும்பவும் புதுப்பித்து பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Tags : Sukkaliyur ,area ,Anna Nagar , Unused health complex in Sukkaliyur Anna Nagar area
× RELATED கரூர் சுக்காலியூர் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும்