×

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையால் கரூர்அமராவதி ஆற்றில் லேசான வெள்ளப்பெருக்கு

கரூர்: கரூர் அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அமராவதி ஆற்றில் லேசான அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அமராவதி ஆற்றில் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அப்போது அதிகளவு வெள்ளம் அமராவதி ஆற்றில் வந்தது. தற்போது, கடந்த சில நாட்களாக அமராவதி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் ஆற்றில் லேசான அளவில் வெள்ளநீர் செல்கிறது. அவ்வாறு வரும் நீர், செட்டிப்பாளையம் தடுப்பணை வழியாக பாய்ந்து, பல்வேறு பகுதிகளுக்கு பிரிந்து செல்கிறது. மேலும், ஆற்றிலும் ஒரளவு தண்ணீர் சென்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Tags : flooding ,river ,catchment area ,Karur Amravati , Light flooding of Karur Amravati river due to rains in the catchment area
× RELATED ஸ்ரீநகர் பகுதியில் ஜீலம் ஆற்றில்...