டெல்லி: மகாராஷ்டிராவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்த குழந்தைகளுக்கு ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தது கடும் துன்பத்தை தருகிறது. குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை மகாராஷ்டிரா அரசு செய்து தர வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.