×

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு: 7 குழந்தைகள் உயிருடன் மீட்பு

மும்பை: மகாராஷ்டிராவில் பண்டாரா மாவட்ட அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிக்கொண்ட மேலும் 7 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. மராட்டிய மாநிலம் பண்டாரா மாவட்டத்தில் பண்டாரா மாவட்ட பொது மருத்துவமனை ஒன்று உள்ளது.  

இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் திடீரென குழந்தைகள் சிகிச்சை பிரிவில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்து உள்ளனர்.  இதுபற்றி அந்த மருத்துவமனையின் அறுவை சிகிச்சை மருத்துவர் பிரமோத் கன்டேட் கூறும்பொழுது, அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து 7 குழந்தைகளை மீட்டு உள்ளோம்.  அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Tags : children ,government hospital ,Marathaland , 10 infants killed in fire at government hospital in Marathaland: 7 children rescued alive
× RELATED இறந்த கணவரின் சொத்தில் மனைவிக்கு முழு...