×

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி: சசிகலா வெளியே வந்தாலும் அதிமுக நான்காக உடையாது

சென்னை: சசிகலா, சிறையில் இருந்து வெளியே வந்தாலும் அதிமுக நான்காக உடையாது. இது எக்கு கோட்டை போன்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு கடந்த 4ம்தேதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. பெரம்பூர் ஜமாலியா பகுதியில் உள்ள ரேஷன் கடையில் நேற்று பொங்கல் பரிசு வழங்கும் பணியை மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இதுவரை 70 சதவீத பேருக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருமொழி கொள்கை என்பதில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. எந்த இடத்திலும் இந்தி திணிக்கப்படாது என மத்திய அரசு கொடுத்துள்ள உறுதிமொழியை மத்திய அரசு காப்பாற்ற வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வந்ததால் அதிமுக நான்காக உடையும் என சிலர் கூறி வருகின்றனர். அதிமுக உடைவே உடையாது. அது ஒரு எக்கு கோட்டை. யார் நினைத்தாலும் ஒன்றும் செய்ய முடியாது.

Tags : Jayakumar ,interview ,AIADMK ,Sasikala , Minister Jayakumar interview: AIADMK will not break even if Sasikala comes out
× RELATED எண்ணி முடிக்கவே 2...