×

புறநகர் ரயில்களின் எண்ணிக்கை 401 ஆக அதிகரிப்பு

சென்னை: இதுகுறித்து சென்னை கோட்டம் வெளியிட்ட அறிக்கை:  10ம் தேதி முதல்  ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படும் புறநகர் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை 401  சேவைகளாக அதிகரிக்கப்படுகிறது.  அதன்படி சென்னை சென்ட்ரல் -அரக்கோணம் மார்க்கமாக 147 சேவைகளும், சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி மார்க்கமாக 66 சேவைகளும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மார்க்கமாக 136 சேவைகளும், சென்னை கடற்கரை - வேளச்சேரி மார்க்கமாக 52 சேவைகள் என இனி வரும்  அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் 401 புறநகர் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.   அத்துடன் ஞாயிற்றுக்கிழமைகளில் பின்பற்றப்படும்.

Tags : Increase in the number of suburban trains to 401
× RELATED சென்னையில் சட்டம் ஒழுங்கு...