×

டிஎன்பிஎஸ்சி முறைகேடு மேலும் இரண்டு இடைதரகர்கள் கைது

சென்னை: டி.என்.பி.எஸ்.சி பெயரில் போலி பணி நியமன ஆணை வழங்கிய விவகாரத்தில் புரோக்கர்களாக செயல்பட்ட மேலும் இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5 லட்சம் பணம் மற்றும் 5 சவரன் பறிமுதல் செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் 100க்கும் மேற்பட்டோருக்கு போலி பணி நியமனம் வழங்கி பல கோடி வசூலித்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் மோசடிக்கு உடந்தையாக இருந்த மந்தைவெளியை சேர்ந்த ரமணி (எ) வெங்கடாச்சலம் (58) மற்றும் பட்டாபிராமை சேர்ந்த தேவன் (எ) தேவராஜ் (63) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ₹5 லட்சம் , 5 சவரன் நகைகள் மற்றும் 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Two more intermediaries arrested for DNPSC abuse
× RELATED மேல்மலையனூர் அருகே இளைஞர் அடித்துக் கொலை