×

உள்ளாட்சி அமைப்பு நடுவராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்பு

சென்னை: தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் நியமிக்கப்படுவதாக தமிழக அரசு கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்பு முறை மன்ற நடுவராக மாலிக் பெரோஸ்கானுக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நேற்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியில் அவர் மூன்று ஆண்டுகள் பணியில் இருப்பார். பதவியேற்பு நிகழ்ச்சியில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமை செயலாளர் சண்முகம், கவர்னரின் செயலாளர் ஆனந்த்ராவ் பாட்டீல் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Malik Peroscan ,body judge , Malik Peroscan appointed local body judge
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...