×

சட்டமன்ற தேர்தலில் அதிமுக-பா.ஜ கட்சியினரை மக்கள் விரட்டியடிப்பார்கள்: உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

விழுப்புரம்: கடந்த மக்களவைத் தேர்தலை போன்றே, சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக, பாஜகவை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள் என்று திமுக மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்  விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இரண்டு நாள் பிரசார பயணத்தை நேற்று தொடங்கினார். இளைஞரணி நிர்வாகிகள் இடையே கலந்துரையாடினார்.  இதன்பின், திறந்த ஜீப்பில் ஊர்வலமாக சென்ற உதயநிதி ஸ்டாலின் வியாபாரிகள், பொதுமக்களிடையே பேசியதாவது:- இந்த அரசு மக்களின் வரிப்பணத்தில் தினமும் விளம்பரம் அளித்து வருகிறது. நான் பிரசாரம் செய்யும்போது வன்முறையை தூண்டுவதாக வழக்கு தொடர்ந்தார்கள். நேற்று ஆபாசமாக பேசுவதாக வழக்கு தொடர்ந்துள்ளனர். நான் ஆபாசமாக பேசுகிறேனா? முதல்வர் பழனிசாமி படிப்படியாக வளர்ந்ததாக சொல்கிறார். அவர் சசிகலா காலில் விழுந்து கிடந்தார். தற்போது முதல்வருக்கு 2 ஆப்பு உள்ளது. சசிகலா 27ம் தேதி வெளியே வருகிறார். உடனே அவர் காலில் முதல்வர் விழுந்துவிடுவார்.

அடுத்த பிரச்சினையை மோடிக்கும், இவருக்கும் பொதுமக்கள் வைக்க உள்ளனர். கடந்த மக்களவை ேதர்தலைப்போலவே, வரவுள்ள சட்டமன்றத்தேர்தலிலும் அதிமுக, பாஜகவை மக்கள் ஓட, ஓட விரட்டியடிப்பார்கள். வாக்கு கேட்டு வரும் அதிமுகவினரிடம் ஜெயலலிதா எப்படி இறந்தார் என கேளுங்கள். கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்திற்கு புயல், வறட்சி என பெரிய பாதிப்பால் மத்திய அரசிடம் 10,500 கோடி இழப்பீடு கேட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாததால், அந்த கோபத்தால் ரூ.1500 கோடி மட்டுமே மத்திய அரசு வழங்கியது. மோடிக்கு சிறந்த அடிமை யார் பழனிசாமியா, பன்னீர்செல்வமா என என்று போட்டி வைக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : assembly elections ,AIADMK ,campaign ,BJP ,Stalin ,Udayanithi , People will chase AIADMK-BJP in assembly elections: Udayanithi Stalin's campaign
× RELATED சிக்கிம் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி...