சென்னை: திரையரங்குகளில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கக்கோரி பிலிம் பெடரேஷன் அமைப்பு சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்கு பெடரேஷன் தலைவரும், தயாரிப்பாளருமான கலைப்புலி எஸ்.தாணு கடிதம் எழுதியுள்ளார். கல்வி நிலையங்கள் திறக்கப்படாத நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் அனுமதிப்பது நல்லதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர்.