தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் மோசடி நடந்ததாக எழுந்த புகாரில் நடவடிக்கை கோரி மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை இயக்குநர், தூத்துக்குடி ஆட்சியர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் 82 பயனாளிகளுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.