×

நாகையில் கோயிலுக்குள் இளம்பெண் கூட்டு பலாத்காரம் : மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என ராமதாஸ் ஆவேசம்!!

சென்னை : இளம்பெண்ணை கோயிலுக்கு கடத்திச் சென்று இளைஞர்கள் பலாத்காரம் செய்தது அதிர்ச்சி அளிக்கிறது என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாகை மாவட்டம் நாகூர் நாகத்தோப்பு என்ற இடத்தில் கூலி வேலைக்கு சென்று திரும்பிய இளம்பெண்ணை இரு இளைஞர்கள் கோயிலுக்குள் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மனித நேயமற்ற மிருகத்தனமான இந்த செயலை செய்த மனித மிருகங்கள் மிகக்கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். மனித மிருகங்களுக்கு துணை போனவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்! பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தரமான சிகிச்சை வழங்க வேண்டும்.பாலியல் வன்கொடுமைகளை தடுப்பதற்காக 2013ம் ஆண்டில் ஜெயலலிதா அறிவித்த 13 அம்சத் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். அதன்மூலம் பெண்கள் பாதுகாப்பாக நடமாடுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும், எனத் தெரிவித்துள்ளார்.


Tags : Gang rape ,temple ,Ramadas ,Nagai ,human beings , Dragon, gang rape, human beasts
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...