×

சென்னை வடக்கு மாவட்டத்திற்கு பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்: துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சென்னை வடக்கு மாவட்டத்திற்கு புதிய பொறுப்புக்குழு உறுப்பினர்களை நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் செவ்வனே நடைபெற்றிடவும் புதியதாக அமையப் பெற்ற சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளராக தா. இளைய அருணா அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னைவடக்கு மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.

அதன்படி, பொறுப்புக்குழு உறுப்பினர்களாக எல். அருளரசன், ரா.கருணாநிதி, ஆர்.வெற்றிவீரன், ஏ.டி.மணி, ரா.லட்சுமணன், எஸ்.பி.எஸ். புத்தன், மு.கோபி, எஸ்.எம்.அப்துல் ரகுமான், வி.தயாளன், என்.சிவக்குமார், பொன். லட்சுமி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Responsible Committee Members ,Chennai North District ,Thuraimurugan Announcement , Appointment of Responsible Committee Members for Chennai North District: Thuraimurugan Announcement
× RELATED திருமாவளவன் பேட்டி எங்கள் மீதான அதிமுகவின் கரிசனத்தில் உள்நோக்கம்