சென்னை: பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் திரையரங்குகளில் 100 சதவிகித பார்வையாளர்களை அனுமதிக்கும் முடிவை திரும்ப பெற வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். பொது சுகாதார விதிகளில் எந்தவித சமரசமும் செய்துக்கொள்ளப்படாது என அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டியில் கூறியுள்ளார்.