சென்னை: தியேட்டர்களில் 100% பார்வையாளர்களின் அனுமதிக்கு எதிரான வழக்கை அவசரமாக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. மனுதாரர் பிரபு தரப்பில் அவசரமாக விசாரிக்க கோரியதை ஏற்க உயர்நீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டனர். வழக்கு பட்டியலிடப்பட்டு விசாரணைக்கு வரும் போது தான் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.