வாஷிங்டன்: அதிபர் தேர்தலில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இன்றி ட்ரம்பும், அவரது ஆதரவாளர்களும் தொடர்ந்து பொய்யான குற்றசாட்டுகளை கூறிவருகின்றனர். அவர்கள் போராடுவது எதிர்பார்த்த ஒன்றுதான் என ஒபாமா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு நடத்திய வன்முறை நாட்டுக்கே அவமானம். இது நிச்சியம் வரலாற்றில் இருக்கும் என அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.