×

சென்னையில் கொரோனாவால் இறந்த 8 குடும்பங்களுக்கு 25 லட்சம் நிதி: மாநகராட்சி தகவல்

சென்னை:  சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த 8 பேருக்கு 25 லட்சம் நிவாரணமும், பாதிக்கப்பட்ட 51 பேருக்கு 2 லட்சம் நிதி உதவியும் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த மே, ஜுன், ஜூலை, ஆகஸ்ட் போன்ற மாதங்களில் அதிக தொற்று உறுதி செய்யப்பட்து வந்தது. தினசரி இறப்பும் அதிகம் பதிவாகியது. குறிப்பாக முன்கள பணியாளர்களும் கொரோனா தொற்றால் மரணம் அடைந்தனர். இவ்வாறு மரணம் அடைந்தவர்களின் விவரம் தொடர்பாக சென்னை மாநகராட்சி கணக்கெடுப்பு நடத்தியது.

இதில் பணியாளர் எண், பதவி, துறை, வயது, பாலினம், ஆய்வகத்தின் பெயர், தொற்று உறுதி செய்யப்பட்ட நாள் , சிகிச்சை பெற்ற மருந்துவமனை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டது. இதன்படி தமிழக அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.இதன்படி சென்னை மாநகராட்சியில் கொரோனா தொற்றால் மரணம் அடைந்த 12 நிரந்தர பணியாளர்கள் 8 பேருக்கு 25 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 பேருக்கு விரைவில் வழங்கப்படும். இதைப்போன்று கடந்த ஜூலை 11ம் தேதி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 118 நிரந்தர பணியாளர்களில் 51 பேருக்கு 2 லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கு விரைவில் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : families ,Corporation ,Chennai , Chennai, Corona, Corporation, Information
× RELATED சேமநல நிதியில் இருந்து 16 காவலர்...