×

மாநகராட்சி அதிகாரிகள் கூடி டெங்குவை கட்டுப்படுத்த திட்டம் வகுக்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களால் டெங்கு பரவுவதால், அந்த வாகனங்களை அப்புறப்படுத்த சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிடக் கோரி வக்கீல் சூரியபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மக்களுக்கு தங்களின் ஆரோக்கியத்தில் அக்கறையில்லை என வேதனை தெரிவித்த நீதிபதிகள், சென்னை மட்டுமல்லாமல், தமிழகத்தில் உள்ள அனைத்து நகரங்களில், மாநகராட்சி சுகாதார துறை அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி, டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். இதுசம்பந்தமாக 4  வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக சுகாதார துறை செயலாளருக்கு உத்தரவிட்டனர்.
இதேபோல சென்னை மாநகராட்சியில், நடைபாதைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள், சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டனர்.


Tags : Corporation officials ,iCourt , Corporation officials, dengue, highCourt, order
× RELATED 2021-ல் கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில்...