×

ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்தி நிதி வசூல் செய்வதா?: ரசிகர்களுக்கு தலைமை மன்ற நிர்வாகி கண்டனம்

சென்னை: ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி வி.எம்.சுதாகர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கும், ரஜினி மக்கள் மன்றத்தினரும் ரஜினியை அரசியலில் ஈடுபடச்சொல்லி கட்டாயப்படுத்துவதற்காக போராட்டங்களில் ஈடுபட இருப்பதாக சில ரசிகர்கள் பேசி வருவது, அவரை மேலும் நோகடிக்கச் செய்யும் செயலாகும்.

இந்தப் போராட்டத்துக்காக சிலர் அதற்கான செலவுகளுக்கு என்று சொல்லி நிதி வசூல் செய்வதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இது மிகவும் வருந்தத்தக்கது. ரஜினி உடல்நலனில் அக்கறையும் கொண்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும், ரசிகர்களும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்.

Tags : Rajini ,Chief executive ,fans , Rajini, condemnation
× RELATED நம் பிரதமர் உலகில் அதிகம் பொய் பேசும்...