×

புழல் ஏரியிலிருந்து நீர் திறப்பு நிறுத்தம்

சென்னை: புழல் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. சென்னை மக்களுக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்று புழல். இதன் மொத்த கொள்ளளவு 3300  மில்லியன் கனஅடி. நேற்று முன்தினம் இரவு முதல் பெய்த தொடர் மழையால் ஏரிக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதன் முழு கொள்ளளவு நிரம்பியதால், நேற்றுமுன்தின மதியம் ஒரு மணி அளவில் உபரி நீர் திறந்து விடப்பட்டது.

முதற்கட்டமாக 500 கன அடியாகவும், பின்னர் 1500 கன அடி  உபரி நீர் திறக்கப்பட்டது. இரவு நேரத்தில் மழை இல்லாததாலும் நீர்வரத்து குறைந்ததாலும். நேற்று காலையில் உபரிநீர் திறப்பது 100 கன அடியாக திறக்கப்பட்டது. பின்னர், நேற்று மதியம் 12 மணியளவில் தண்ணீர் நிறுத்தப்பட்டு ஷட்டர்களும் மூடப்பட்டது. நேற்றைய நிலவரப்படி 3300 மில்லியன் கனஅடி உள்ள கொள்ளளவில் 3258 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து 260 கன அடி வினாடிக்கு வந்துகொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்காக 130 கனஅடி வினாடிக்கு அனுப்பப்படுகிறது.

Tags : opening ,Phuhl Lake , Puzhal Lake, water opening, parking
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா