×

நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 202 நாள் சிறை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் விச்சு(எ)சைலேஷ்குமார்(27). ரவுடி.கடந்த வருடம் ஜூலை மாதம் வண்ணாரப்பேட்டை துணை ஆணையரிடம் நன்னடத்தை விதியின்படி குற்ற சம்பவத்தில் ஈடுபடமாட்டேன் என எழுதிக் கொடுத்திருந்தார். அதனை மீறி கடந்த 1ம் தேதி நவீன்குமார்(20) என்பவரை இரும்பு கம்பியால் அடித்து பணம் பறித்தார். நன்னடத்தை மீறியதால்  202 நாள் சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags : Rowdy , Thandayarpet, Rowdy, Jail
× RELATED குண்டர் சட்டத்தில் ரவுடி கைது