சென்னை: குமரியில் எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கு தொடர்பாக மேலும் ஒருவரை என்ஐஏ கைது செய்தது. வில்சன் கொலை வழக்கில் கூட்டுச்சதி செய்ததாக ஷியாபுதீன் என்பவரை என்ஐஏ போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த கோவை ஷியாபுதீனை என்ஐஏ போலீசார் சென்னையில் கைது செய்தனர். வில்சன் கொலை வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைதான நிலையில் மேலும் ஒருவரை என்ஐஏ செய்தது. குமரி களியக்காவிளை சோதனைச்சவாடியில் எஸ்.ஐ. வில்சன் ஜனவரி 2020-ல் கொல்லப்பட்டார்.