சென்னை: பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களின் மௌன அலறல் ஓயவில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்தவர் கைதாகி இருக்கிறார், இது பாதிக்கப்பட்டவர்களின் நீதிக்கு பாதையாக இருக்க வேண்டும். வேறு எதற்காகவும் பயன்பட்டுவிடக் கூடாது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார்.