பஞ்சாப்: பஞ்சாபில் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகள் மீது தொடரப்பட்ட கொலை முயற்சி வழக்கு ரத்து செய்யப்பட்டது. வேளாண் சட்டத்துக்கு எதிராக பாஜக முன்னாள் அமைச்சர் வீடு முன் சாணத்தைக் கொட்டியதாக விவசாயிகள் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது. சாணத்தை கொட்டிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய அமரீந்தர் சிங் உத்தரவிட்டுள்ளார்.